Cognizant நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 18 முதல் அலுவலகம் மீண்டும் திறப்பு!
கொரோனா தொற்று ஏற்படுத்திய மாற்றத்தால் தற்போது IT நிறுவன ஊழியர்கள் WFH முறையில் வேலை செய்து வரும் நிலையில் காக்னிசண்ட் நிறுவன ஊழியர்கள் ஏப்ரல் முதல் மீண்டும் அலுவலகம் வரவழைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
WFH முறை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்து வருவதால், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் மீண்டும் அலுவலகங்களை தொடங்குவதாக அறிவித்துள்ளன. இப்போது, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ரிமோட் ஒர்க்கிங் பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஒரு ஊழியர் வீட்டிலிருந்து வேலை செய்யத் தேர்வு செய்தாலும், அடிப்படை இடத்திலிருந்து பணிபுரியும்படி கேட்கப்படுவார்கள். இந்த நிலையில் காக்னிசண்ட் நிறுவனம், வரும் வாரங்களில் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது குறித்த கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவதாக கூறியுள்ளது.
தமிழகத்தில் சொத்து வரி அதிரடியாக உயர்வு – அரசாணை வெளியீடு! பொதுமக்கள் அதிர்ச்சி!
அதாவது, காக்னிசண்ட் நிறுவனம் தனது ஊழியர்களை தன்னார்வ அடிப்படையில் ஏப்ரல் 18 முதல் அலுவலகங்களுக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தற்போது ஒரு கலப்பின வேலை மாதிரியை பின்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வேலை மாதிரி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து காக்னிசன்ட் நிறுவனம் மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “கடந்த பல வாரங்களாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை எளிதாக்குவதை நாங்கள் காண்கிறோம்.
இது தொற்றுநோயின் முடிவு பார்வையில் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, வணிகத் தேவையின் அடிப்படையில், உள்ளூர் விதிமுறைகளின் படி சமூக விலகல் இனி எங்களுக்குத் தேவையில்லை. ஒமிக்ரான் மாறுபாட்டின் நிச்சயமற்ற பாதை மற்றும் உலகளவில் புதிய கொரோனா பாதிப்புகளின் நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாங்கள் ஏப்ரல் 2022 இல் அலுவலகத்தை தொடங்குவோம். அதுவரை, பயணம் மற்றும் அலுவலக அடிப்படையிலான பணிகள் தடை செய்யப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தது.