12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுகள் வெளியீடு!

0
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முடிவுகள் வெளியீடு!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - முடிவுகள் வெளியீடு!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுகள் வெளியீடு!

மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க படாததால் ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகள் நடைபெற்றது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை மே 2 முதல் ஜூன் 12 வரை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகள்:

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், இந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து, மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 94.22% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இது குறித்து வாரிய தலைவர் ஷரத் கோசாவி அறிவித்த முடிவுகளின்படி, இந்த ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி 95.35% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி 93.29 % ஆகவும் உள்ளது. 12-ம் வகுப்பு தேர்வில் இந்தாண்டு மொத்தம் 14,59,664 மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

அவர்களில் 14,39,731 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13,56,604 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் கொங்கன் பிரிவு 97.21 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து நாக்பூர் – 96.52%, அமராவதி – 96.34%, லத்தூர்- 95.25%, கோலாப்பூர்- 95.07%, நாசிக்- 95.03%, அவுரங்காபாத்- 94.97%, புனே- 93.61%, மும்பை பிரிவு 90.91% தேர்ச்சி சதவீதத்தைப் பதிவு செய்தது. மேலும் அறிவியல் பிரிவில் 98.30%, கலைப் பிரிவில் 90.51%, வணிகவியல் பிரிவில் 91.71%, தொழிற்கல்வி பாடப்பிரிவில் 92.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கோசாவி தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!