தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் தேதிகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் முதல்வரின் அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதே போல 1 – 9 வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்றது. தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 10,11,12ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ரிசல்ட் எப்போது? சரிபார்ப்பது எப்படி?
இந்த நேரத்தில் கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. மேலும் புதிதாக குரங்கு அம்மை நோயும் பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் திட்டமிட்டபடி ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது ஏற்கனவே திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் முதல்வரின் அலுவலக அதிகாரிகள் எங்களுக்கு தெரிவிப்பாா்கள்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையும் மாணவர்களுக்கு தெரிவிக்கும். 2021 – 2022ம் கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 6 லட்சம் மாணவா்கள் பொதுத் தோ்வு எழுதவில்லை என்று தகவல்கள் வந்துள்ளது . அதனை கவனிக்க வேண்டிய கடமை பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது. இவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதனால் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் ஜூலை மற்றும் செப்டம்பா் மாதங்களிலும் தோ்வு நடைபெற்றால் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.