தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – பிப்.1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் 8-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் பிப்ரவரி 1-ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இணையத்தளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த நிலையில் 1 – 9 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த நிலையில் தனி தேர்வுகளுக்கான தேர்வு கொரோனா தாக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக அரசின் இ-சேவை மையங்களில் மதிப்பெண் & மாற்றுச் சான்றிதழ் – கல்வித்துறை அறிவிப்பு!
அதன் பிறகு தடுப்பூசிகள், கட்டுப்பாடுகளால் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து 8-ம் வகுப்புகளுக்கான தனித்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு கால அட்டவணை வெளியானது. தேர்வு நடைபெறும் நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு மழை வெளுத்து வாங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு சற்று கால தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் MBBS, BDS பொது பிரிவினருக்கான கலந்தாய்வு – நாளை (ஜன.30) துவக்கம்!
பிறகு மழைப்பொழிவு குறைய தொடங்கியதும் ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 8ம் வகுப்பு தனித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 1ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் http://dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் தங்களின் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.