தமிழகத்தில் MBBS, BDS பொது பிரிவினருக்கான கலந்தாய்வு – நாளை (ஜன.30) துவக்கம்!

0
தமிழகத்தில் MBBS, BDS பொது பிரிவினருக்கான கலந்தாய்வு - நாளை (ஜன.30) துவக்கம்!
தமிழகத்தில் MBBS, BDS பொது பிரிவினருக்கான கலந்தாய்வு - நாளை (ஜன.30) துவக்கம்!
தமிழகத்தில் MBBS, BDS பொது பிரிவினருக்கான கலந்தாய்வு – நாளை (ஜன.30) துவக்கம்!

தமிழக மருத்துவ கல்லூரிகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்படுகிறது. 2021 ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு ஆன்லைன் வாயிலாக ஆகஸ்ட் 10 தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பிறகு செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் முறையாக மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டு நீட் தேர்வு 13 பிராந்திய மொழிகளில் நடைபெற்றது. சுமார் 16.14 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதினர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 18 மாத நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!

அதனை தொடர்ந்து இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்திலும் 24 ஆம் தேதி 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,930 பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஐ. சிவா என்பவர் 514 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார். இவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ஜன.27ம் தேதி அன்று நடைபெற்றது.

மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் இட ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது பொது பிரிவினருக்கான மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை முதல் பிப்ரவரி 7 வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. இரண்டாவது கவுன்சிலிங் போது, காலியிடங்களுக்கு ஏற்ப, தரவரிசை பட்டியல் அடிப்படையில், விரும்பிய கல்லூரிகளில் இடம் வழங்கப்படும். இரண்டாவது கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பினால் பதிவு செய்ய வேண்டும் என்று நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!