தமிழக அரசின் இ-சேவை மையங்களில் மதிப்பெண் & மாற்றுச் சான்றிதழ் – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மதிப்பெண் சான்றிதழை பெற முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
இ-சேவை மையங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் – கூட்டுறவுத்துறை அறிவிப்பு!
இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து ஒரு அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால் அரசின் நிலையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட வேண்டும். அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 18 மாத நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து மாணவர்களும் ஒரு முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழை இ-சேவை மையங்கள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் வருவாய் மற்றும் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.