தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் – கூட்டுறவுத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கன அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி 1 முதல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
கூட்டுறவு துறை அறிவிப்பு
சமீப காலமாக மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கன சம்பள உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 14 % அகவிலைப்படி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் MBBS, BDS பொது பிரிவினருக்கான கலந்தாய்வு – நாளை (ஜன.30) துவக்கம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் ‘புதிய அடிப்படை ஊதியத்தில் 14% அகவிலைப்படி வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிகளுக்கான கூடுதல் பதிவாளர் அருணா, அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றைக்கை அனுப்பியுள்ளார்.
IPL 2022: ஏலத்தை குறிவைக்கும் U-19 வீரர்கள் – யாஷ் துல் முதல் ராஜ் பாவா வரை! ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் அரசின் திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் பணியில், ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே, அரசு ஊழியர்களுக்கு இணையாக விரைந்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறினார்.