IPL 2022: ஏலத்தை குறிவைக்கும் U-19 வீரர்கள் – யாஷ் துல் முதல் ராஜ் பாவா வரை! ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL 2022: ஏலத்தை குறிவைக்கும் U-19 வீரர்கள் - யாஷ் துல் முதல் ராஜ் பாவா வரை! ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022: ஏலத்தை குறிவைக்கும் U-19 வீரர்கள் – யாஷ் துல் முதல் ராஜ் பாவா வரை! ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2022 ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரி 12,13 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL அப்டேட்:

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக துபாயில் நடைபெற்ற 14 வது சீஸனும் சிறப்பாக முடிவடைந்தது. இத்தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது . இதை தொடர்ந்து IPL தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன. சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடி வந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக இணைகின்றன.

TN Job “FB  Group” Join Now

இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. BCCI அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுத்துள்ளது. ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்கலாம் என்பதால் பெரிய பெரிய வீரர்கள் கூட அடுத்த சீசனுக்கான ஏலத்தில் இடம்பெறவுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல்லில் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு U-19 வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2022: மெகா ஏலத்தில் லக்னோ அணியின் திட்டம் இதுதான்?கௌதம் கம்பீர் பேட்டி! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இதற்கு முன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா (2008), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் (2010), உன்முக்த் சந்த், ஹனுமா விஹாரி (2012), குல்தீப் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (2014), இஷான் கிஷன், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் (2016) , ப்ரித்வி ஷா, ஷுப்மான் கில் (2018) ரவி பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கார்த்திக் தியாகி (2020) மற்றும் U-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி IPL லில் நுழைந்துள்ளார்கள். இதை தொடர்ந்து தற்போதைய U-19 வீரர்களாகிய ஹர்னூர் சிங், ஹர்னூர் சிங்,ராஜ் பாவா,யாஷ் துல்,விக்கி ஆஸ்ட்வால் ஆகியோர்களுக்கு IPL லில் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!