TNPSC குரூப் 2 & 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – ஜூன் மாத இறுதியில் ரிசல்ட்? ஆணையம் விளக்கம்!
கடந்த மே 21ம் தேதியன்று நடைபெற்ற TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாக இருப்பதாக தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
குரூப் 2 தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கபட்டபடி, சார் பதிவாளர், வணிகவரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு கடந்த மே மாதம் 21ம் தேதியன்று குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்படி, குரூப் 2 பதவிக்கான 5529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு சுமார் 11 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!
இந்த தேர்வு முடிவடைந்த சில நாட்களுக்கு பின்பாக, இத்தேர்வுக்கான ஆன்சர் கீ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆன்சர் கீயை வைத்து குரூப் 2 தேர்வர்கள் முதல்நிலைத் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்கக்கூடும் என்பதை கணக்கிட முடியும். ஏனென்றால், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே குரூப் 2 முதன்மை தேர்வுகளுக்கு தயாராக முடியும் என்பதால் இந்த ஆன்சர் கீ தேர்வர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இருப்பினும் குரூப் 2 தேர்வர்கள் தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் ஜூன் மாத இறுதியில் அதாவது 20ம் தேதிக்கு பின்பாக குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவு வெளியாகும் என்று TNPSC தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் இதை தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2023ம் ஆண்டு ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.