மீண்டும் இரவு ஊரடங்கு அமல், கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – மாநில அரசின் உத்தரவு!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் கொரோனா பாதிப்புகள் சமீபத்தில் குறைந்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள்:
உத்தரப்பிரதேசத்தின் கௌதம் புத் நகரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 57 பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மாவட்டத்தில் 223 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது அங்கு செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 844 ஐ எட்டியுள்ளது என்று அரசின் திகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதிக்குப் பிறகு மாவட்டத்தில் செயலில் உள்ள நோய் தொற்று எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாகக் குறைந்தது இதுவே முதல் முறை.
தமிழகத்தில் பிப்ரவரி 15க்கு பின்னர் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – முதல்வர் ஆலோசனை!
கௌதம் புத் நகரில் இதுவரை மொத்தம் 488 பேர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்புகள் அதிக அளவில் இருந்த போது அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அமல்படுத்தியது. இரவு ஊரடங்கு மற்றும் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதித்தது. தற்போது நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு பல தளர்வுகளை அளிக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கலெக்டர்கள் உத்தரவு!
கௌதம் புத் நகரில் கோவிட்-19 நோய் பாதிப்பு குறைந்திருப்பதால் மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது மற்றும் ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்களை மீண்டும் திறப்பது போன்ற சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 12ம் தேதியான இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் இப்போது திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் கோவிட் நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.