தமிழகத்தில் பிப்ரவரி 15க்கு பின்னர் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – முதல்வர் ஆலோசனை!

0
தமிழகத்தில் பிப்ரவரி 15க்கு பின்னர் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் - முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் பிப்ரவரி 15க்கு பின்னர் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் - முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் பிப்ரவரி 15க்கு பின்னர் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளை நீட்டிப்பது குறித்து இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகள், அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஆலோசனை கூட்டம்:

இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தினசரி பாதிப்பு, ஒரு சில மாநிலங்களில் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஜனவரி கடைசி வாரத்தில், இரவு ஊரடங்கு தடை, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு தடை மற்றும் பள்ளி கல்லூரிகள் பிப் 1 முதல் திறப்பு என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த உத்தரவு பிப் 1 முதல் பிப் 15 வரை அமலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், அதனை நீட்டிப்பது குறித்து 14ம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளதாக, முன்பு அறிவிப்பு வெளியானது.

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பிப்.16 முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்!

இந்த நிலையில் சென்னையில் நேற்று 663 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 590 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 66,992 லிருந்து 56,002ஆக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 14,051 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,37,265 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 14ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாட்டு கூடுதல் தளர்வு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!

இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள், அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்குகள் உள்ளிட்ட சில இடங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, திருமணங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி, பொருட்காட்சி நடத்த தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ள சூழலில்,அதற்கு தளர்வு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. மேலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், மழலையர் பள்ளி திறக்க அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாக அதிகாரிகள் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!