மார்ச் 8 வரை பள்ளி & கல்லூரிகளை சுற்றி தடை உத்தரவு நீட்டிப்பு – மாநகர காவல்துறை அறிவிப்பு!

0
மார்ச் 8 வரை பள்ளி & கல்லூரிகளை சுற்றி தடை உத்தரவு நீட்டிப்பு - மாநகர காவல்துறை அறிவிப்பு!
மார்ச் 8 வரை பள்ளி & கல்லூரிகளை சுற்றி தடை உத்தரவு நீட்டிப்பு - மாநகர காவல்துறை அறிவிப்பு!
மார்ச் 8 வரை பள்ளி & கல்லூரிகளை சுற்றி தடை உத்தரவு நீட்டிப்பு – மாநகர காவல்துறை அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த ஹிஜாப் விவகாரத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விதிப்பட்டிருந்த 144 தடை உத்தரவு மார்ச் 8 வரை நீட்டிக்கப்படுவதாக பெங்களூரு மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

தடை உத்தரவு

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக கர்நாடகா மாநிலம் முழுவதும் நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு மத்தியில், பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதாவது, மாணவர்களிடையே வெடித்த போராட்டம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவு வரை அத்தியாவசிய காரணம் இன்றி மக்கள் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கூடுவதை தவிர்த்து பிப்ரவரி 22ம் தேதி வரை அமல்படுத்தப்படிருந்த இக்கட்டுப்பாடுகள் மார்ச் 8 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மீண்டும் அமலாகும் பழைய ஓய்வூதிய திட்டம்!

இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை பிறப்பித்துள்ள ஒரு புதிய உத்தரவில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144(1)ன் கீழ் பள்ளிகள், PU கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் இருக்கும் 200 மீட்டர் தொலைவு வரை பொது மக்கள் ஒன்று கூடுவதை இந்த உத்தரவு தடுக்கிறது. ஹிஜாப் பிரச்சினை இன்னும் விசாரணையில் இருப்பதால், பெங்களூரு நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை சுற்றி எந்த வகையான கூட்டம், போராட்டம் அல்லது எதிர்ப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த பிரிவு 144(1) தடை உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

இதற்கிடையில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டு வழக்கமான முறையில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஹிஜாப் விவகாரம் தொடர்புடைய விசாரணை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அதுவரை மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு நகரத்தில் பொது அமைதி மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மார்ச் 8 வரை தொடர காவல்துறைத் தலைவர் முடிவு செய்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!