மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மீண்டும் அமலாகும் பழைய ஓய்வூதிய திட்டம்!
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
பஞ்சாப் மாநிலத்தில் 2022ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 20ம் தேதியான நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சியாய் பிடிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வந்தது. இதில் மக்களுக்கான நல்ல திட்டங்களை அறிவிக்கும் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற அதிக விப்புகள் உள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இருந்தார்.
தமிழகத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிப்ரவரி 20ம் தேதியான நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தான் மீண்டும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தலில் செயல்பட்டு வந்தது. இதனால் தேர்தல் களத்தில் புதியதாக பல வாக்குறுதிகளையும் அளித்து வந்தது. அதன்படி, பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் எங்கள் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடனே, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் இரவுநேர முழு ஊரடங்கு உத்தரவு? அரசு விளக்கம்!
ஏழாவது ஊதியக் குழுவின் அனைத்து முரண்பாடுகளும் நீக்கப்படும் என்றும், அனைத்து ஒப்பந்த பணியாளர்களும் பணிநிரந்தரம் செய்யப்பாடுவார்கள் என்றும் தெரிவித்தது. அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பூசல் காரணமான முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதுக்கட்சி தொடங்கிய அமரீந்தர் சிங், இந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.