தமிழகத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது பொது போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே தனது பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில்கள் ரத்து
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் பொது சேவைகளில் ஒன்றான மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ள சில தளர்வுகளையும் தெற்கு ரயில்வே அறிவித்தது. இதில் குறிப்பாக பயணிகள் முன்பதிவின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்றும் கொரோனா தடுப்பூசியை செலுத்தியவர்கள் நேர கட்டுப்பாடின்றி பயணிக்க அனுமதி அளித்துள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு ரிட்டர்ன், சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது.
144 தடை உத்தரவு அமல் & பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
இதனை தொடர்ந்து ரயில்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி நாளை ரத்தாக உள்ள ரயில்களின் பட்டியலை தெற்கு ரயில்வே தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டதாவது, விஜயவாடா- சென்னை சென்ட்ரல் பகுதிக்கிடையே (12711) காலை 6.10 மணி அளவில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (பிப்.22) கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையேயும் மற்றும் சென்னை சென்ட்ரல்- விஜயவாடா பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் (12712) பிற்பகல் 2.10 மணி அளவில் இயக்கப்படும் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே நாளை ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நெல்லூர் – சூலூர்பேட்டை பகுதிக்கு இடையே (06746) காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் சூலூர்பேட்டை- நெல்லூர் பகுதிக்கு இடையே (06745) காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் உள்ளிட்டவை பராமரிப்பு காரணமாக நாளை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் பகுதிக்கு இடையே (06742) பிற்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் மற்றும் மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை பகுதிக்கு இடையே (06741) காலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் அத்துடன் ஆவடி- மூர்மார்க்கெட் இடையே (66000) காலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மூர்மார்க்கெட்- ஆவடி இடையே (6603) இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் உள்ளிட்டவை நாளை ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.