ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு! முழு விபரம் இதோ!

1
ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு! முழு விபரம் இதோ!
ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு! முழு விபரம் இதோ!
ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு! முழு விபரம் இதோ!

ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் வசதியை தற்போது ரிசர்வ் வங்கி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எவ்வாறு ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் என்பதற்கான அனைத்து வழிமுறைகளும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு:

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது ரிசர்வ் வங்கி நிதி கொள்கை ஏடிஎம் கார்டு இல்லாமலும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கலாம் என்கிற முடிவை எடுத்துள்ளது. தற்போதைக்கு ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் பயனாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமலும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் கொடுக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்க பயனாளர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

TCS, HCL, Infosys, Cognizant நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH? புதிய முறை அறிமுகம்!

அதாவது பயனாளிகள் அந்தந்த வங்கிகளின் செயலிகளை நிறுவ வேண்டும். அந்த செயலியில் உள்ள அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பிறகு பயனாளிகளின் விவரங்கள் மற்றும் எடுக்க வேண்டிய தொகைகளை சேர்க்க வேண்டும். பயனாளரின் மொபைல் எண்ணை உறுதி செய்த பிறகு வங்கியிலிருந்து OTP மற்றும் ஒன்பது இலக்க ஆர்டர் ஐடி அனுப்பப்படும். அதற்குப் பிறகு பயனாளி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க அந்த OTP மற்றும் ஆர்டர் ஐடி பரிவர்த்தனைக்கான தொகை மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

நூறு ரூபாயில் இருந்து வங்கிகளில் பணம் எடுத்துக்கொள்ளலாம். மேலும் அதிகபட்சமாக எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பது அந்தந்த வங்கியை பொருத்து மாறுபடும். ஹெச்டிஎஃப்சி வங்கி பயனாளிகளுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என அறிவித்துள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 25 சேவை கட்டணமும் வசூலிக்கப்படும். இதனால் 40 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் எளிதான முறையில் பணம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!