தமிழகத்தில் அரசுத் துறை வேலைகளுக்கான இட ஒதுக்கீடு – அரசு விளக்கம்!
அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்டோர்கள், பழங்குடியினர்கள், ஊனமுற்றவர்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போல 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழக அரசில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தகுதி தேர்விலேயே பிற்படுத்தப்பட்டோர்கள், பழங்குடியினர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்களுக்கு சிறப்பான சில சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக எந்த தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் படிப்படியாக அனைத்து தகுதித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
மேலும், குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெற இருப்பதால் லட்சக்கணக்கானோர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கே பலரும் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்துடன், பிற்படுத்தப்பட்டோர்கள், பழங்குடியினர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்களுக்கு தகுதித் தேர்வில் கட்டண சலுகைகள் வழங்குவது மட்டுமல்லாமல் CUT-OFF மதிப்பெண் முறையிலும் சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி முதல் சமையல் எண்ணெய் வரை விலை உயர்வு? மத்திய அரசின் புதிய GST வரி!
இது மட்டுமல்லாமல், அரசு வேலைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தபட்டோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பான இட ஒதுக்கீடு வழங்கபடுகிறது. இதேபோல, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சிறப்பான இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி பல கோரிக்கைகள் வந்தன. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கென்றே தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 3-ம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை அரசு உறுதி செய்ததும் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.