அரிசி முதல் சமையல் எண்ணெய் வரை விலை உயர்வு? மத்திய அரசின் புதிய GST வரி!
மத்திய அமைச்சகத்தின் GST கூட்டத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு முதல் பிராண்ட் இல்லாத அரிசி வரையுள்ள பல்வேறு பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற விவரங்களை இப்பதிவில் காணலாம்.
புதிய ஜிஎஸ்டி விதி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தற்போது சண்டிகரில் நடைபெற்று வரும் 47வது GST கவுன்சில் கூட்டத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு முதல் பிராண்ட் இல்லாத அரிசி வரையுள்ள பல பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இன்று நடைபெற்று வரும் 2ம் நாள் GST கூட்டத்தில் பல வரி விகிதங்களை சரிசெய்யவும் சில வரி விலக்குகளை திரும்ப பெறவும் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் மீது செய்யப்பட்ட வரி தொடர்பான பரிந்துரைகள் எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஜூன் மாதத்திற்கு மேல் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆன்லைன் கேமிங், குதிரை பந்தயம், சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியாக 28% வரி விகிதத்தை அமல்படுத்தும் திட்டத்தையும் கவுன்சில் ஆராய இருக்கிறது. இதற்கிடையில், தேசிய ஜிஎஸ்டியில் சேர்க்கப்படும் விற்பனை வரி (வாட்) குறித்தும் கவுன்சில் இன்று விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது, ஜிஎஸ்டி மாற்றத்தின் விளைவால் எந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில், இறைச்சி, மீன், தயிர், பன்னீர் மற்றும் தேன் போன்ற பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், முத்திரையிடப்படாத மாவு மற்றும் அரிசி போன்ற பொருட்கள் முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்டு லேபிளிடப்பட்டிருந்தால், 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். தற்போது, இந்த பொருட்களின் பிராண்டட் பதிப்புகள் மட்டுமே 5% ஜிஎஸ்டியை பெறுகின்றன. இதை தொடர்ந்து காசோலைகளை வழங்க வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இனி ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
அடுத்த ஒரு மாதத்திற்கு 144 தடை – அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் உலர்ந்த பருப்பு காய்கறிகள், கோதுமை மற்றும் பிற தானியங்கள், கோதுமை அல்லது மெஸ்லின் மாவு, வெல்லம், பஃப் செய்யப்பட்ட அரிசி (முரி), கரிம உரம் மற்றும் தென்னை நார் உரம் ஆகியவற்றிற்கு இப்போது 5 சதவீத வரி விதிக்கப்படும். அச்சிடுதல், எழுதுதல் மற்றும் வரைதல் மை, குறிப்பிட்ட கத்திகள், கரண்டிகள் மற்றும் மேஜைப் பாத்திரங்கள், எல்இடி விளக்குகள் மற்றும் வரைதல் கருவிகள் போன்ற பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதம் 12% லிருந்து 18% ஆக உயர்த்தப்படும். சோலார் வாட்டர் ஹீட்டர்கள் மற்றும் ஃபினிஷ்ட் லெதருக்கு 5% முதல் 12% வரை வரி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, தொகுக்கப்படாத, லேபிளிடப்படாத மற்றும் முத்திரை இல்லாத பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள வரிவிலக்குக்கு எதிராக, நாளொன்றுக்கு ரூ.1,000க்கும் குறைவான கட்டணம் கொண்ட ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும். தவிர சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்இடி விளக்குகள், அச்சிடுதல் அல்லது வரைதல் மை, சோலார் வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பல பொருட்களுக்கான தலைகீழ் வரி கட்டமைப்பில் திருத்தம் செய்வது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.