தமிழக தொழிற்கல்வி மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில் இட ஒதுக்கீடு? அரசின் புதிய முடிவு!
தமிழகத்தில் தொழிற்கல்வியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொழிற்கல்வி மாணவர்களுக்கு அனைத்து வகையான பொறியியல் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு வழங்க உள்ளதாக அரசு முடிவு எடுத்துள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 20ம் தேதி அன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்துடன் அசல் சான்றிதழ்களை வருகிற ஜூலை 19ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் அத்துடன் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 12ம் வகுப்பு தொழிற்கல்வி மாணவர்களுக்கு அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் 100 இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மொத்த இடத்தில் 4% இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு அண்ணா பல்கலை வளாக கல்லூரிகள் மற்றும் பல்கலையின் 17 உறுப்பு கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இதனை தொடர்ந்து தற்போது தொழிற்கல்வி படிப்பை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய வசதி – மாவட்ட ஆட்சியர் அதிரடி முடிவு!
இந்த நிலையில் நேற்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் தொழிற்கல்வி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலையின் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இவர்களுக்கு அனைத்து வகையான பொறியியல் கல்லூரிகளில் 2% இடங்களை ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி இவர்கள் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி உள்ளிட்ட 6 வகையான பொறியியல் படிப்புகளில் சேரலாம் என்று கூறப்படுகிறது.