குடியரசு தின அலங்கார ஊர்திகள் – ஒருவார காலம் பொது மக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு!
தமிழகத்தில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள குடியரசு தின அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் அங்கேயே நிறுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அலங்கார ஊர்திகள்:
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் தேசிய கொடியினை ஏற்றி மரியாதையை செலுத்துவர். அதனை தொடர்ந்து முப்படை வீரர்களும் அணிவகுப்பு மரியாதையினை தெரிவிப்பர். அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் தலைநகரங்களில் மாநில முதல்வர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைப்பர். மேலும் அன்றைய தினம் நாட்டு பற்றை பறைசாற்றும் வகையில் கலாச்சார நடனங்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூறும் வகையில் சொற்பொழிவு போன்றவை நடைபெறும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
அதன்படி நடப்பாண்டு மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்தியை தீவுத்திடலில் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு இந்த ஊர்திகள் வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசுக்கு கோரிக்கை!
மற்ற மாவட்ட மக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த ஊர்தியை காண வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் ஊர்திகளை பார்வையிட வந்த மாணவச் செல்வங்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று குடியரசு தின அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் அங்கேயே நிறுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.