நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசுக்கு கோரிக்கை!
ஹாங்காங் நகரத்தில் ஒமிக்ரான் பாதிப்புகள் தொடர்ச்சியாக பெருகிக்கொண்டே வருவதால் இதனை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியான ஹாங்காங் நகரத்தில் சமீப காலமாக கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு தீவிரமடைந்து வருகிறது. இந்த தீவிர பரவலை சமாளிக்க நகரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சீன அரசாங்கமும், பெய்ஜிங் நிர்வாகமும் அறிவுறுத்தி வரும் நிலையில் ஹாங்காங் அரசு இதற்கு தயக்கம் காட்டி வருகிறது. என்றாலும் வணிக சேவைகள் தடைபடாத வண்ணம் ஹாங்காங் ஒன்பது நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சட்டவியலாளர் மைக்கேல் டியன் கூறியுள்ளார்.
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
இதற்கிடையில் ஹாங்காங் நிர்வாகம், அனைத்து மக்களுக்கும் கட்டாயமான கொரோனா பரிசோதனையை 3 முறை நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், அத்தியாவசிய வணிகங்களும் மூடப்படும் என்றும் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் ஹாங்காங் துணை டியென் அறிவித்திருக்கிறார். ஆனால் ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம், மீண்டும் அந்த வாய்ப்பை நிராகரித்து, அதற்குப் பதிலாக நகர மக்கள் வீடுகளில் தங்கி இருக்கும்படியான கட்டுப்பாடுகளை தொடரலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு LIC வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இப்போது, கடுமையான பூட்டுதல்களுடன் வைரஸ் பாதிப்புகளை வெற்றிகரமாக கையாண்ட பெய்ஜிங், ஹாங்காங்குடனான பேச்சுவார்த்தைகளில் முழு ஊரடங்கை விதிப்பதை ஆதரித்துள்ளது. இது, அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பெய்ஜிங் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒப்பீட்டளவில் நீண்ட காலத்திற்குப் பிறகு, ஹாங்காங் இப்போது தொற்றுநோயின் மிக மோசமான பாதிப்புகளை அனுபவித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய நோய்த்தொற்றுகள் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.