10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு LIC வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி மக்களுக்கு உதவும் வகையில் பகுதி நேர வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எல்.ஐ.சி:
இந்தியாவில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்புகளை நாடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அத்தியா மாநில அரசுகள் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு துறையில் உள்ள 5000 காலிப்பணியிடங்கள் SSC தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக குடிமைப்பணியியல் தேர்வான UPSC தேர்வின் கீழ் 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதாகவும் இதற்கான முதல் நிலை தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – தேர்வு தேதி, தகுதி,ஊதியம் & முழு விவரங்களுடன்..!
அதனை தொடர்ந்து தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது. எல்.ஐ.சி ஏஜென்ட் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு தகுதியானவர்கள் நீங்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ வேலை செய்யலாம். பணியில் சேர விரும்புவோர் அருகிலுள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். மேலும் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
EPF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் PF மாற்றம்! முழு விவரங்கள் இதோ!
மேலும் இவர்களுக்கு ஏஜென்சி பயிற்சி மையத்தி 25 மணி நேர பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு IRDAI தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த தேர்வில் பெறுபவர்களுக்கு காப்பீட்டு முகவருக்கான பணி நியமன அடையாள அட்டை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், முகவரிச் சான்று, அடையாளச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, 6 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.