CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

0
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது வழக்கம் போல் அனைத்து பள்ளி,கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு ரத்து செய்வதற்கான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

நேரடி பொதுத்தேர்வு

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு CBSE, ICSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் மதிப்பெண்களை மாற்று வழிகளில் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆலோசனைகளை வழங்கியது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதால் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.

மார்ச் 5 வரை தடை உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு! ஹிஜாப் விவகாரம்!

அதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொது தேர்வு நடத்த வேண்டும் என்று CBSE, ICSE, தேசிய திறந்தநிலை பள்ளி, மாநில கல்வி வாரியங்கள் முடிவு செய்தனர். ஆனால் நடப்பு ஆண்டில் குறைந்த அளவிலான நாட்களில் தான் நேரடி வகுப்புகள் நடைபெற்றுள்ளது. மேலும் கொரோனா தொற்று தற்போது குறைந்து இருந்தாலும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் பொது தேர்வினை நடத்த கூடாது என்று குழந்தை நல ஆர்வலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு LIC வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் CBSE, ICSE உள்ளிட்ட வாரியங்கள் நேரடி முறையில் பொதுத்தேர்வை நடத்த ஆயத்தமாக உள்ளது. அதனால் இதனை ஒரு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை இன்று விசாரிக்க உள்ளார்கள். இந்த விசாரணையின் முடிவில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படுமா அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படுமா என்பது பற்றி அறிய முடியும். அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!