மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை 3 சதவீதமாக உயர்த்தப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் மார்ச் மாத சம்பளத்தில் எவ்வளவு பணம் அதிகரிக்கும் என்பதற்கான கணக்கீட்டு விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாக வரவிருக்கும் மார்ச் மாதத்தில் DA குறித்த முடிவு கிடைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2022 மார்ச் மாதத்தில், ஹோலிக்கு முன்னதாக அகவிலைப்படியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஜனவரி 2022 தவணைப்படி 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 31 சதவீதம் DA மற்றும் DR வழங்கப்படுகிறது.
ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
ஆனால், மார்ச் மாதத்தில் இது 34% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்போது அரசு ஊழியர்களின் மார்ச் மாத சம்பளத்துடன், இந்த DA தொகை 34 சதவீதமாக வழங்கப்படும். வழக்கமாக அகவிலைப்படி (DA) உயர்வு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் ஒருவரின் சம்பளம் ரூ.20000 என்றால், 3 சதவிகிதம் என்ற விகிதத்தில் ஒரு மாதத்தில் அவரது சம்பளம் ரூ.600 அதிகரிக்கும். இந்த அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரம் கடந்த 12 மாதங்களுக்கான [AICPI சராசரி – 115.76/115.76]×100 என்ற அளவில் இருக்கும்.
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
இப்போது PSU (பொதுத் துறை அலகுகள்) இல் பணிபுரியும் நபர்களின் அகவிலைப்படியை பற்றி பேசினால், அதன் கணக்கீட்டு முறை – அகவிலைப்படி சதவீதம் = (கடந்த 3 மாத நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100)- 126.33) x100 என்று இருக்கும். அந்த வகையில் 7வது ஊதியக் குழுவின் படி, ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.31,550 என்றால் DA கணக்கீடுகளின் படி,
- அடிப்படை ஊதியம் – ரூ 31550
- மொத்த அகவிலைப்படி (DA) – 34% – மாதத்திற்கு ரூ 10,727
- இதுவரை செலுத்தப்பட்ட அகவிலைப்படி (DA) – 31% – ரூ 9781
- அகவிலைப்படியை (DA) 3% உயர்த்தினால் – ரூ 946 (ஒவ்வொரு மாதமும்) அதிகமாக வரும்.
- வருடாந்திர அகவிலைப்படி செலுத்துதல் – 3 சதவீத உயர்வுக்குப் பிறகு ரூ. 11, 352 (மொத்தம் 34 சதவீதம்) என கணக்கிடப்படும்.
இப்போது ஒரு ஊழியரின் அதிகபட்ச சம்பள வரம்பில், அடிப்படை சம்பளம் ரூ.56,900 என்றால், மொத்த ஆண்டு அகவிலைப்படி தொகை ரூ.2,32,152 ஆக இருக்கும். அவருக்கு தற்போதைய DAவை விட ரூ.1707 கூடுதலாக கிடைக்கும். அதே நேரத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.19346 என்ற அளவில் DA தொகை கிடைக்கும் என்பது தெளிவாகியுள்ளது.