சமையல் சிலிண்டர் மானியம் பெறுவதற்கான புதிய விதிமுறை வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

0
சமையல் சிலிண்டர் மானியம் பெறுவதற்கான புதிய விதிமுறை வெளியீடு - முக்கிய அறிவிப்பு!
சமையல் சிலிண்டர் மானியம் பெறுவதற்கான புதிய விதிமுறை வெளியீடு - முக்கிய அறிவிப்பு!
சமையல் சிலிண்டர் மானியம் பெறுவதற்கான புதிய விதிமுறை வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில் சமையல் சிலிண்டருக்கான மானிய தொகையை பெற புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையல் சிலிண்டர்:

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான சமையல் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆனால் அதன் தேவையும் அதிகமாக இருப்பதால் மக்கள் வேறு வழியில்லாமல் சிலிண்டரை எந்த விலை கொடுத்தும் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு மக்களின் நிதிச்சுமையை குறைக்க முன்னதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் படி மக்கள் சமையல் சிலிண்டரை முழு தொகை கொடுத்து வாங்க வேண்டும் என்றும், அதன் பின் அவர்களுக்கு மானியத் தொகையாக குறிப்பிட்ட தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

Exams Daily Mobile App Download

ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக மானியத் தொகை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் மானியத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பலருக்கு இந்த மானியத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு வழங்கப்படுவர்களுக்கு மானியத் தொகை குறைவாக கொடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

புது வீட்டிற்கு செல்லும் குஷியில் கதிர் & முல்லை, ஆசிர்வதிக்கும் தனம் – ப்ரோமோ ரிலீஸ்!

அதனால் மக்கள் நிம்மதி அடைந்த நிலையில் அதில் சில விதிமுறைகள் இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளர்களுக்கு மட்டும் தான் இந்த மானியம் வழங்கப்படும் எனவும், ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டருக்கு மட்டுமே ரூ. 200 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் சிலிண்டர் மானியம் பெற உங்களது ஆதார் கார்டை சிலிண்டர் கணக்குடன் இணைக்க வேண்டும். அதற்கு முன்னதாக வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். மேலும், அந்த வங்கி கணக்கை தான் சிலிண்டர் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து, சிலிண்டர் கணக்கை ஆதார் அட்டை உடன் நேரடியாக சென்று இணைக்க பாரத் கேஸ், இண்டேன், ஹெச்.பி. கேஸ் ஆகிய சிலிண்டர் இணையதளத்திற்கு சென்று அதில் இருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அருகில் உள்ள சிலிண்டர் ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். மேலும், உங்களது சிலிண்டர் நிறுவனத்தின் இணையத்தில் உங்களுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். அல்லது போன் கால் மூலமாகவும் சிலிண்டருடன் ஆதார் கார்டை இணைக்கலாம். இந்நிலையில், 18000-2333-555 என்ற நம்பருக்கு கால் செய்து சிலிண்டர் மற்றும் ஆதார் கார்டு விவரங்களை கொடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலமாக SMS வழியாகவும் இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!