புது வீட்டிற்கு செல்லும் குஷியில் கதிர் & முல்லை, ஆசிர்வதிக்கும் தனம் – ப்ரோமோ ரிலீஸ்!
முல்லையின் தாலி செயினை அடகு வைத்து முல்லையும் கதிரும் புது வாடகை வீட்டிற்கு செல்லவுள்ளனர். இந்நிலையில் தற்போது புது வாடகை வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக கதிர் தனத்திடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எப்படியும் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த பிறகு முல்லையும் கதிரும் குடும்பத்தினருடன் இணைந்து விடுவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கதிர், முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதலுக்கு குடும்பத்தினர்கள் செலவு செய்த ஐந்து லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்கும் வரைக்கும் வீட்டிற்கு வரவே மாட்டேன் என தற்போது வரைக்கும் வீண் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் கெஞ்சியும் அந்த வீட்டிற்கு வர கதிரும் முல்லையும் சம்மதிக்கவே இல்லை.
Exams Daily Mobile App Download
மேலும், மூர்த்தியின் மருத்துவ செலவுக்காக செலவு செய்த இரண்டு லட்ச ரூபாயையும் நானே தருகிறேன் என ஜனார்த்தனனிடம் கதிர் வாக்கு கொடுத்திருக்கிறார். கதிர் தனியாளாக எப்படி இவ்வளவு கடனை அடைக்க போகிறாரோ என குடும்பத்தினர்கள் பதறிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வீடு வாடகைக்கு எடுக்க கூட காசு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது முல்லை தான் தனது தாலிச் செயினை கழற்றி கதிரிடம் கொடுக்கிறார். இருப்பினும், கதிர் அதை வாங்க மறுக்கிறார். ஆனால், உங்களது நண்பர்களிடம் மட்டும் காசை வாங்கிக் கொள்கிறீர்கள், நான் கொடுத்தால் வாங்க மாட்டீர்களா என கூறி கதிரிடம் தாலி செயினை கொடுக்கிறார்.
தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும், வாடகை வீடு கிடைத்து விட்ட குஷியில் முல்லையும் கதிரும் வந்து கொண்டிருக்கும்போது எதார்த்தமாக தனத்தையும் ஜீவாவையும் பார்க்கின்றனர். அப்போது, தனத்தை அழைத்து எங்களுக்கு வாடகை விடை கிடைத்துவிட்டது என கூறுகிறார். பின்னர் தன் கையில் வைத்திருந்த வீட்டு சாவியை தெரிந்தே கீழே போட்டு தனது அண்ணியின் காலில் விழுவது போல ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறார் கதிர். பின்னர்,புது வீட்டுக்கு செல்வதற்கு முன்னே அண்ணியை பார்த்தாச்சு என கதிரும் முல்லையும் மகிழ்ச்சியாக கிளம்பும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.