தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தேனி மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஜூலை 2ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் விபத்துகளை தடுக்கவும், மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. வழக்கமாக, இந்த பராமரிப்பு பணிகளின் போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மாற்றுதல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, சில நேரங்களில் தெருக்களில் வளர்ந்துள்ள உயரமான மரங்கள் மின் பாதைகளுக்கு தடையாக இருக்கும். அதனால் அவைகள் வெட்டப்பட்டு அகற்றப்படுகிறது. மேலும் மின் வயர்களும் இடையூறு இல்லாத வகையில் உயர்த்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஜூலை 2ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பட்டிபாளையம், ஊத்துக்குளி கிழக்கு வீதி, சீரங்கம்பாளையம், சாலப்பாளையம், புதுப்பாளையம், கரட்டுப்பாளையம், இச்சிப்பாளையம், பனப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – சூப்பரான 5 சேமிப்பு திட்டங்கள்! முழு விபரம் இதோ!
அதே போல இச்சிப்பாளையம், பனப்பாளையம், பாறைக்காட்டுப்புதூா், தேனீஸ்வரன்பாளையம், ராமமூா்த்தி நகா், வடுகபாளையம், செட்டிபாளையம், தோப்புத்தோட்டம், ஜே.ஜே.நகா், சா்வோதயா சங்கம், மொரட்டுப்பாளையம், சேடா்பாளையம், காவேரி நகா், கே.எஸ்.ஆா்.நகா், சஷ்டி காா்டன் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ஜூன் 2ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளா் தெரிவித்துள்ளார்.