மீண்டும் தீவிரமடையும் குரங்கு அம்மை நோய் – மத்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்!

0
மீண்டும் தீவிரமடையும் குரங்கு அம்மை நோய் - மத்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்!
மீண்டும் தீவிரமடையும் குரங்கு அம்மை நோய் - மத்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்!
மீண்டும் தீவிரமடையும் குரங்கு அம்மை நோய் – மத்திய சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்!

75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குரங்கு காய்ச்சலைத் கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

குரங்கு அம்மை நோய்:

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை பெரும் பாதிப்புக்கு தள்ளிய கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று இன்னும் ஓய்ந்தபாடில்லை. கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் பரவி உள்ளதால் உலக சுகாதார நிறுவனம் (WHO) சமீபத்தில் குரங்கு காய்ச்சலை சர்வதேச கவலையின் உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, மங்கி பாக்ஸ் என்ற குரங்கு அம்மை விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ்.

Exams Daily Mobile App Download

இது மருத்துவரீதியாக குறைவான தீவிரம் கொண்டதாக இருந்தாலும், பெரியம்மை நோயாளிகளிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட அறிகுறிகளை கொண்டுள்ளது. 1980 இல் பெரியம்மை ஒழிப்பு மற்றும் பெரியம்மை தடுப்பூசி நிறுத்தப்பட்டதன் மூலம், குரங்கு பாக்ஸ் பொது சுகாதாரத்திற்கான மிக முக்கியமான ஆர்த்தோபாக்ஸ் வைரஸாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நோயின் அறிகுறிகள் பொதுவாக காய்ச்சலில் இருந்து தொடங்கி ஒன்று முதல் மூன்று நாட்களுக்குள் மற்றும் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டில் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சலைத் தவிர்க்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்டு உள்ளது.

RRB குரூப் D தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – நாளை(ஆக. 7) ஆன்லைன் மாதிரி தேர்வு

செய்ய வேண்டியவை:
  • நோய் பரவாமல் இருக்க பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களை தனிமைப்படுத்துதல்.
  • கையை சானிடைசர்கள் கொண்டு சுத்தம் செய்தல்.
  • சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுதல்.
  • நோயாளிக்கு அருகில் இருக்கும் போது மாஸ்க் மற்றும் கையுறைகளை அணிந்து இருக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழலை சுத்தப்படுத்த கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல்.
செய்யக்கூடாதவை:
  • நோய்த்தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்களுடன் கைத்தறி, படுக்கைகள், ஆடைகள், துண்டுகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.
  • நோயாளிகள் அழுக்கடைந்த துணிகளை, நோய்த்தொற்று இல்லாதவர்களின் துணிகளுடன் சேர்த்து சலவை செய்ய கூடாது.
  • நோயின் அறிகுறிகள் தென்பட்டால், பொது நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!