தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – நேரடி வகுப்புகளுக்கு வரவேற்பு! மாணவர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக டிசம்பர் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் 40 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் பள்ளிகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் வருவதாக கூறுகின்றனர்.
மாணவர்கள் உற்சாகம்:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒன்றரை ஆண்டாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டன. இருப்பினும் நடப்பு ஆண்டு மீண்டும் கொரோனா நோய் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வு எழுதுவோர்களான 10ம் வகுப்பு முதல்12 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தமிழக சமூக நலத்துறையில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்படுவதாக, தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும், மேலும் இரவு ஊரடங்கு தடை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தடை என அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில், இன்று கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உடன் பள்ளிக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் MS தோனி!
மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் கோவை மாவட்டத்தில் 2040 பள்ளிகளில் 574727 மாணவ, மாணவிகள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும் ஆன்லைனில் படிப்பதை விட பள்ளிகளில் நேரடி வகுப்பு மூலம் படிப்பது பிடித்திருப்பதாகவும் மாணவ, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.