IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் MS தோனி!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் MS தோனி!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் MS தோனி!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் MS தோனி!

இந்த ஆண்டுக்கான IPL தொடர் வருகிற மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவில் உள்ள மும்பை மற்றும் புனேவில் நடைபெற உள்ளது. IPL வீரர்களுக்கான மெகா ஏலம் தொடங்க இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் MS தோனி மெகா ஏலத்தில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL மெகா ஏலம்:

இந்த ஆண்டு மெகா ஏலத்தில் வலுவான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் குறித்து கூடிய விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதற்காக CSK அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். இதை தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அதற்கான அணியை தயாரிக்கும் படி இக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் CSK ஹெட் கோச் பிளெமிங் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன. இதனால் CSK அணி சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பிப்.15ம் தேதி கலந்தாய்வு!

அதே நேரத்தில் சீனியர்களையும் கைவிட்டு விட கூடாது என்ற நிலைப்பாட்டில் தோனி இருப்பதாக தெரிகிறது. இதனால் டுபிளஸி, பிராவோ, லுங்கி கிடி, அம்பத்தி ராயுடு, சர்துல் தாக்கூர், தீபக் சாஹர் போன்ற சென்னைக்காக விளையாடிய வீரர்களை தோனி குறிவைக்க உள்ளார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் CSK அணி IPL கோப்பையை வெல்லவும் மேலும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பிப்ரவரி மாதம், நடக்கும் மெகா ஏலத்தில் வீரர்களை எடுக்க CSK அணி திட்டமிட்டு வருகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் MS தோனி மெகா ஏலத்தில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்!

ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12-13 தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. கோவிட் வழிமுறைகளுடன் ஆக்க்ஷன் நடக்கும் என்று BCCI சமீபத்தில் தெரிவித்தது. இதில் சென்னை அணி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் ஏலத்தின் போது CSK க்காக MS தோனி கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏலம் விடும் போது தோனி இருந்தால் அவரது அனுபவங்களையும் கொண்டு சிஎஸ்கே அணி புத்திசாலித்தனமாக தேர்வு வீரர்களை செய்யும். தற்போது ஏல விவாதத்திற்காக தோனி சென்னையில் இருப்பதாக சிஎஸ்கே நிர்வாக உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார். எனவே IPL ஏலத்தில் தோனி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!