தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முன்னாள் துணை முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை
இந்தியாவில் தற்போது அத்தியாவாசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு ஆண்டுக்கு தலா 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலை உள்ளிட்டவைகளில் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரிக்கேற்ப, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக காய்கறிகள், பழங்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று கூறப்படுகிறது. அத்துடன் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்களின் கட்டணம் குறையும் என்பதால் அத்துடன் நாட்டில் பணவீக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். மேலும் இவர் கூறியதாவது, கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 50 காசுகள் குறைந்து 100 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும். இதேபோல் டீசல் 89 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும் என்ற நிலை உருவாகும் என்றும் கூறியுள்ளார். அதே சமயம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.