இந்தியாவின் ‘இந்த’ மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர மற்ற மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்:
இந்தியாவில் வடமேற்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் எனவும், நாளை முதல் மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு இன்று சிவப்பு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்தியப் பிரதேசம் மற்றும் தெற்கு உத்தரப் பிரதேச பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் இருந்து வடமேற்கு மத்தியப் பிரதேசத்தின் வழியாக நகர்வதால் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், குஜராத் பிராந்தியத்தின் வடக்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், மேலும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான DA நிலுவைத்தொகை எப்போது? அரசு ஆலோசனை!
அதே போல நாளை மேற்கு ராஜஸ்தான் பகுதிகளில் மழைப்பொழிவும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிழக்கு மத்திய பிரதேசம் பகுதிகளில் மழைப்பொழிவும், நாளை மேற்கு மத்தியப் பிரதேசம், கங்கை மேற்கு வங்கம், மத்திய மகாராஷ்டிரா, கொங்கன் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை குஜராத் பகுதியிலும், இன்று சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியிலும், ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சட்டீஸ்கர் பகுதியில் மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரைக்கும் கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்