மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான DA நிலுவைத்தொகை எப்போது? அரசு ஆலோசனை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான DA நிலுவைத்தொகை எப்போது? அரசு ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான DA நிலுவைத்தொகை எப்போது? அரசு ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான DA நிலுவைத்தொகை எப்போது? அரசு ஆலோசனை!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி கடந்த வருடங்களில் பரவிய கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அகவிலைப்படி நிலுவை தொகை:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அந்த தொகையானது கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது மற்றும் அதை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு கடந்த 2021 ஜூலை மாதம் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர். இந்த நேரத்தில் 7 வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி தற்போது மீண்டும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2020ம் ஆண்டு நிலவிய கொரானா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத அகவிலைப்படி நிலுவை (DA Arrear) தொகையை வழங்குவது குறித்து அரசு ஊழியர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து விரைவில் அகவிலைப்படி நிலுவை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுமார் 1 முதல் 2 லட்சம் வரை ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!