தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் போக்குவரத்து கழகத்திற்கு புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் முக்கிய அறிவிப்பு:
நேற்று நடைபெற்ற சட்டசபை வாக்குவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் தெரிவித்த போது தமிழ்நாட்டில் பல வழித்தடங்களில் பஸ்கள் கொரோனா காலங்களில் நிறுத்தப்பட்டன. இதற்கு காரணம் அப்போதைய ஆட்சியில் போதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இல்லாததே என தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளை (பிப்.24) வேலைவாய்ப்பு முகாம் – 30000 பேருக்கு வேலை! அரசு ஏற்பாடு!
தற்போது தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிய ஓட்டுநர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு எழுத்து தேர்வு முடிவு பெற்று நேர்காணல் முடிந்துள்ளது. அவர்களுக்கான பணி நியமன ஆணையம் விரைவில் வழங்கப்பட உள்ளது. அடுத்ததாக மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை பணிக்கு எடுப்பதற்கு முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டார் எனவும நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.