தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்காக பிப். 24 (நாளை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் நாளை (பிப். 24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ளார்.
மேலும் இது குறித்த அறிவிப்பில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 வது வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் 300க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 30000 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். மேலும் தேர்வானவர்களுக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்குவார்.