தமிழக மகளிர்களுக்கு கலைஞரின் பெயரில் வழங்கப்பட்டு வரும் உரிமை தொகையின் அங்கீகாரம் கைமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உரிமை தொகை திட்டத்தில் மாற்றம்:
தமிழக அரசால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- ஊக்கத்தொகையாக வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மூலம் தற்போது 1,06,52,000 நபர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இத்திட்டம் தொடங்கப்பட்ட போது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வரின் பெயரில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டது.
மாதம் ரூ.16,000/- சம்பளத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிறகு மகளிருக்கு உதவும் நோக்கத்தில் துவங்கப்பட்ட இத்திட்டத்தை முதல்வர் “சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையிடம்” ஒப்படைத்தார். இத்துறையின் கட்டுப்பாட்டை அவரது மகன் உதயநிதிக்கு வழங்கினார். உதயநிதி பொறுப்பேற்ற பின் மாவட்ட வாரியாக சென்று திட்டத்தை தொடங்கி வைப்பது, மேல்முறையீடு செய்பவர்களின் ஆவணங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளை சிறப்புற மேற்கொண்டார். இந்நிலையில் இம்மாதம் பயனர்களுக்கு அரசு சார்பாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் முதல்வரின் பெயருக்கு பதிலாக உதயநிதியின் பெயர் இடம்பெற்றிருந்தது. எனவே மக்கள் மத்தியில் மகளிர் உரிமை தொகைக்கான முழு அங்கீகாரமும் உதயநிதிக்கு மாற்றப்பட்டதா என்னும் குழப்பம் எழுந்துள்ளது.