தமிழகத்தில் 2 முதல் 3 மணிநேரம் திடீர் மின்தடை – தூக்கமின்றி தவித்த மக்கள்! காரணம் என்ன?

0
தமிழகத்தில் 2 முதல் 3 மணிநேரம் திடீர் மின்தடை - தூக்கமின்றி தவித்த மக்கள்! காரணம் என்ன?
தமிழகத்தில் 2 முதல் 3 மணிநேரம் திடீர் மின்தடை - தூக்கமின்றி தவித்த மக்கள்! காரணம் என்ன?
தமிழகத்தில் 2 முதல் 3 மணிநேரம் திடீர் மின்தடை – தூக்கமின்றி தவித்த மக்கள்! காரணம் என்ன?

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று 2 முதல் 3 மணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த மின்தடைக்கு சரியான காரணம் என்ன என குழப்பத்தில் இருந்த நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

மின்தடை காரணம்:

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாதந்தோறும் பல பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆனாலும் நேற்று பல மாவட்டங்களில் 2-3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. கோடை காலத்தில் மின்சார தடை ஏற்பட்ட நிலையில் மக்கள் அவதி அடைந்து இருக்கின்றார். இந்த மின்தடைக்கு காரணம் என்ன தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். அதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 6 மாதங்கள் பயன்படுத்தாவிடில் கார்டு ரத்து!

கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை மாவட்டங்களில் 8 மணிக்கு போன மின்சாரம் 10 மணி அளவில் தான் வந்தது, அதே போல டெல்டா மாவட்டங்களில் 10.40 மணிக்கு போன மின்சாரம் 12 மணிக்கே வந்தது. மேலும் வட மாவட்டங்களிலும் நேற்று இரவு பல இடங்களில் கடுமையான மின் தடை ஏற்பட்டது. அதனால் மக்கள் அவதி அடைந்து மின்சார ஹெல்ப் லைனை அழைத்து பேசினார்கள் ஆனாலும் கூட அதற்கு சரியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

வெயில் அதிகமாக இருப்பதால் வெக்கையில் பலர் இரவில் அவர்களது மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து நெட்டிசன்கள் பலர் ட்விட்டரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து மின்சார கட் சார்.. என்னாச்சு என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்கள். இந்த மின் வெட்டு சமயத்தில் சில மாவட்டங்களில் மின்சாரம் 1 மணி நேரம் தடை செய்யப்பட்டு பின்னர் 2 நிமிடம் மின்சாரம் வந்து, பின்னர் மீண்டும் 1 மணி நேரம் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் மத்திய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை ஆகும். மத்திய மின் தொகுப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாடே சில இடங்களில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மத்திய மின் தொகுப்பில் இருந்து வர வேண்டிய மின்சாரம் வராமல் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!