ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 6 மாதங்கள் பயன்படுத்தாவிடில் கார்டு ரத்து!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருப்பின் அந்த அட்டைதாரர்களுக்கான ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டுகள் அரசின் இந்த மலிவு பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களை பெறுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் புதுப்பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ – 90’s கிட்ஸ்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பயன்படுத்தி பொது மக்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பெற்று கொள்ளலாம். தற்போது ரேஷன் கார்டில் ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் நீண்ட நாட்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ரேஷன் கார்டை ரத்து செய்துவிட்டு கூடுதலாக பொது மக்களுக்கு கூடுதலாக வசதிகளை வழங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், கூடிய விரைவில் இந்த செயல்முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வசதியில் உயர்ந்தவர்களும் ரேஷன் பொருட்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இலவச ரேஷன் பொருட்கள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதையும் அரசு தான் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.