மீண்டும் புதுப்பொலிவுடன் ‘கனா காணும் காலங்கள்’ – 90’s கிட்ஸ்களுக்கு ஹாப்பி நியூஸ்!
கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் சீரியல் தற்போது புதுப்பொலிவுடன் ஏப்ரல் 22 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் 90’s கிட்ஸ்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
கனா காணும் காலங்கள்:
சின்னத்திரையில் இது வரை எக்கச்சக்கமான சீரியல்கள் அறிமுகமாகியிருக்கிறது. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் சீரியலின் அளவுக்கு எந்த சீரியலும் ரசிகர்களின் மத்தியில் சரித்திரமாகவில்லை. 90’ஸ் இளைஞர்களின் மிகவும் விருப்பமான சீரியல் என்றால் அது கண்டிப்பாக கனா காணும் காலங்கள் சீரியல் தான். தற்போது ஏப்ரல் 22 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் புது பொலிவுடன் கனா காணும் காலங்கள் என்னும் வெப்சீரிஸ் அறிமுகமாக இருக்கிறது. அதாவது இந்த தொடர் அப்படியே லாக்டவுன் முடிந்து பள்ளி துவங்குவது போல தொடங்கவுள்ளது.
கோபியை அடித்த ராமமூர்த்தி, வீட்டிற்கு வந்த பாக்கியலட்சுமி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ள இந்த பள்ளியின் நிறுவனராக திரு.சக்திவேல் அறிமுகமாகுகிறார். லாக்டவுன் முடிந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி துவங்குகிறது. இந்த பள்ளியில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை இருப்பதால் பள்ளியை இழுத்து மூட அரசாங்கம் நோட்டீஸை அனுப்பியுள்ளது. இந்த சிக்கலில் இருந்து பள்ளியின் நிறுவனர் எப்படி பள்ளியை மீட்டெடுக்க போகிறார் என்பது தான் கதையாகும். மேலும், பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பள்ளியை மீட்டெடுப்பது தான் கதையின் முக்கிய கருவாகும்.
தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக அறிமுகமாகுகிறார்கள். மேலும், ராஜ்மோகன் PT மாஸ்டராக நடிக்கிறார். தற்போது இந்த கனா காணும் காலங்கள் தொடர் குறித்து ராஜூ கூறியுள்ளார். இந்த தொடரில் நடித்த ஞாபகங்கள் தான் தற்போதும் எனக்கு இருக்கிறது. தற்போது அறிமுகமாகவுள்ள கனா காணும் காலங்கள் என்னும் வெப்சீரிஸ்ஸும் நல்ல வரவேற்பை கிடைக்கும் என நம்புகிறேன் கூறியுள்ளார்.