பிக் பாஸ் பைனலுக்கு வராததற்கு இதுதான் காரணம் – இமான் அண்ணாச்சி ஓபன் டாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் இறுதி சுற்று கடந்த ஞாயிற்று கிழமை பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இறுதி சுற்றில் இமான் அண்ணாச்சி வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் வராதது குறித்து தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்களுடன் 105 நாட்களை கடந்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீசன் மக்கள் பேராதரவுடன் வெற்றியை கண்டுள்ளது. இதுவரை ஒளிபரப்பான பல சீசன்களில் இல்லாத அளவிற்கு போட்டியாளர்கள் தனித்து விளையாடி இருக்கின்றனர். 18 போட்டியாளர்களில் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு அதன் பின் 5 பேர் இறுதி சுற்றில் இருந்தனர். அவர்களில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் ராஜு பிக்பாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்கள் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் பிக்பாஸ் இறுதி சுற்றில் தாமரை, ஐக்கி, அபிநய், ஸ்ருதி, நாதியா சங் போன்ற பலர் கலந்து கொண்டனர். பலர் ராஜூவை உற்சாகப்படுத்த இமான் அண்ணாச்சி வருவார் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. அதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும் அவர் வீட்டில் இருந்த நாட்களில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். அதனால் அவர் பிக்பாஸ் இறுதி சுற்றில் கலந்து கொள்ளாதது குறித்து பல கேள்விகள் எழுந்தது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
தற்போது அண்ணாச்சி அதற்கான விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். அதன்படி பிக்பாஸ் இறுதி சுற்றிற்கு வர கொரோனா பரவல் காரணமாக சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். எனக்கு தொடர்ந்து பட சூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் இருந்தது. அதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வரமுடியவில்லை என சொன்ன அவர், ராஜுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்.