ஜன.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜன.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு - மாநில அரசு அறிவிப்பு!
ஜன.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு - மாநில அரசு அறிவிப்பு!
ஜன.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்த கட்டுப்பாடுகளை வரும் ஜன.31ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

144 தடை உத்தரவு:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று தற்போது வரை பல்வேறு உருமாற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று பரவுவதை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றும் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே ஜன.19ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை நீட்டித்து அம்மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு – CEO அறிவிப்பு!

அதாவது பொதுக்கூட்டங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களில் 100 பேருக்கும், புறவெளியில் நடைபெறும் திருமண நிகழ்வுகளில் 200 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை அமல்படுத்துவதற்காக பெங்களூரில் வரும் ஜன.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல்பந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இத்தகைய தடை உத்தரவு நாட்களில் பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் குறைந்த அளவு இருக்கை அமர்வுகளுடன் மட்டுமே இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மருத்துவமனையில் வேலை – ஜன.19 கடைசி நாள்!

மேலும் மஹாராஷ்டிர, கேரளா மற்றும் கோவா உள்ளிட்ட மாநில எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், சனி, ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் 10,11, 12ம் வகுப்பு மற்றும் மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் உணவகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் 50% இருக்கைகளுடன் இயங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது மாநில பேரிடர் மேலாண்மையின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!