விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்கள் வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது முடிந்துள்ள நிலையில் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களாக இருந்த மூன்று பேர் வெளியில் சந்தித்து உள்ளனர். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வைரல் புகைப்படம்:
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெற்றிகரமாக 5வது சீசன் முடிந்துள்ளது. இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக நல்ல முறையில் பழகி வந்தனர். இருந்த போதிலும், தங்களுக்குள் கருத்து ஒத்துபோனவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் ப்ரியங்கா, நிரூப், அபிஷேக். இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கூட்டாக சேர்ந்து ரகளை செய்து வந்தனர். நண்பர்களை தாண்டிய சகோதர பாசம் வந்திருப்பதாக அவர்கள் கமலிடம் கூறிக்கொண்டனர்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
இவர்கள் மூவரும் இறுதி வரை நிகழ்ச்சியில் அதிக ரகளை செய்யப்போவதை ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நிகழ்ச்சியின் 3வது எலிமினேஷனாக அபிஷேக் வெளியேறினார். இதனால் அவர் மட்டுமில்லாமல் மொத்த பிக் பாஸ் வீடும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அவர் வெளியேறிய பின்னர் நிரூப் மற்றும் ப்ரியங்கா இடையில் தான் அதிக சண்டைகள் நிகழும். இதனால் இவர்கள் நிஜமாகவே நண்பர்கள் தான என்ற சந்தேகமும் எழுந்தது.
தற்போது கடந்த வாரம் நிகழ்ச்சி முடிந்து ப்ரியங்கா 2ம் இடத்தை பிடித்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ப்ரியங்காவிற்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சமீபத்தில் ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் மூவரும் வெளியில் சந்தித்துக் கொண்டுள்ளனர். அதில் உடன் இருக்கும் ஒரு பெண்ணுக்கு ப்ரியங்கா கேக் ஊட்டுவது போல் புகைப்படம் வெளியாகி உள்ளது. அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் நண்பர்கள் மீண்டும் சேர்த்துள்ளது குறித்து ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.