POST OFFICEன் அதிக வருமானத்தை தரும் RD திட்டம் – ரூ.100 முதலீடு செய்து கணக்கு தொடங்கலாம்!
போஸ்ட் ஆபிஸ் அறிமுகப்படுத்தியுள்ள RD திட்டம், அதிக வருமானத்தை ஈட்டும் திட்டமாகும். இந்த திட்டத்தில் அதிகமானோர் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தில் எப்படி கணக்கு தொடங்குவது பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
கணக்கு தொடங்குவது எப்படி:
மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் குறைவான ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு அளிப்பதால் மக்கள் அத்திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்ரா ,பொது வைப்பு நிதி ,5 வருட தேசிய சேமிப்பு பத்திரம், 5 வருட மாத வருமான கணக்கு என பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்த வகையில் தபால் நிலையத்தில் உள்ள சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதம் கொடுக்கின்றன. அந்த வகையில் RD எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
IPL ஏலம் 2022: ரூ.2 கோடி அடிப்படை விலை கொண்ட 17 இந்திய வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்த திட்டத்தை தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் தொடங்கலாம். இந்த கணக்கை தொடங்க ரூ.100 இருந்தால் போதும். மேலும் இந்த திட்டத்துக்கான வட்டி விகிதம் சேமிப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்பு நிதி திட்டத்தை விட அதிகமாகும். இந்த RD கணக்கை தொடங்கி 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். இதனை தொடர்ந்து RD கணக்கு வட்டி விகிதம் அவ்வப்போது மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 5 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாகாண அரசு அறிவிப்பு!
மேலும் இப்போது 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மார்ச் 31 வரையில் வாடிக்கையாளர் செலுத்தும் ஒவ்வொரு தவணையின் தொகையில் வட்டி கணக்கிடப்படுகிறது. மேலும் RD கணக்கு தொடங்கும் போது குடும்பம் அல்லது உறவினர் ஒருவரை வாடிக்கையாளர் நாமினியாக குறிப்பிடலாம். RD சேமிப்பு முதிர்வடையும் முன்பு வாடிக்கையாளருக்கு ஏதேனும் நேர்ந்தால் சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டிய தேதிக்கு முன்னர் பணத்தை எடுப்பதற்கு நாமினிக்கு உரிமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.