IPL ஏலம் 2022: ரூ.2 கோடி அடிப்படை விலை கொண்ட 17 இந்திய வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் 15 வது சீசனுக்கான IPL ஏலம் நடைபெற்றது. நேற்று மெகா ஏலத்தில் பங்கேற்கும் இறுதி பட்டியலை BCCI வெளியிட்டது . இப்பட்டியலில் 17 இந்திய வீரர்கள் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு தங்களது பெயரை பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக துபாயில் நடைபெற்ற 14 வது சீஸனும் சிறப்பாக முடிவடைந்தது. இதை தொடர்ந்து IPL தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன. சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடி வந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக இணைகின்றன.
பிப்.6ம் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!
ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12-13 தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. கோவிட் வழிமுறைகளுடன் ஆக்க்ஷன் நடக்கும் என்று BCCI சமீபத்தில் தெரிவித்தது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்த நிலையில் அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இம்முறை ரூ.2 கோடியே அதிக விலையாகும். மேலும் 48 வீரர்கள் இந்த அடைப்புக்குறிக்குள் தங்களை இடம்பிடிக்க தேர்வு செய்துள்ளனர். இதில் 17 இந்திய வீரர்கள் அடிப்படை விளையான ரூ.2 கோடிக்கு தங்களது பெயரை பதிவிட்டுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
17 இந்திய வீரர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, தேவ்தத் படிக்கல், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, க்ருனால் பாண்டியா, ஹர்ஷல் பட்டேல், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், அம்பதி ராயுடு, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றுள்ளனர். இந்த 17 இந்திய வீரர்கள் தவிர இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் 31 வெளிநாட்டு வீரர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.