பிப்.6ம் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!
கொரோனா தொற்று பரவல் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்று கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைபோல் வரும் பிப்ரவரி 6ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா வைரஸின் 3ம் அலை கேரளாவில் அதிக அளவில் பாதிப்புகளை உண்டாக்கியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இரவு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், கடந்த 2வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடும் அமலில் இருந்தது. இதனால் நோய் தொற்று பரவல் விகிதம் குறைந்து வருவதால் வரவும் ஞாயிற்று கிழமை பிப்ரவரி 6ம் தேதி அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாகாண அரசு அறிவிப்பு!
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி கேரளாவில் 42,154 புதிய கோவிட் வழக்குகள் மற்றும் 38,458 பேர் குணமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளன. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 340 சுகாதார வல்லுநர்கள் அடங்குவர், 38,406 பேர் தொற்று பாதித்தவர்களின் மூலம் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் செயலில் உள்ள கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 3,57,552 ஆக உள்ளது.
கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:
- ஞாயிற்றுக்கிழமை திருமணம் மற்றும் இறப்பு தொடர்பான நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- பால், செய்தித்தாள், மீன், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மற்றும் பொருட்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
- அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் (காவல்துறை, தீயணைப்புப் படை, ஊடகங்கள், அரசு அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் போன்றவை) தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் பயணம் செய்யலாம்.
- மருத்துவக் கடைகள், ஊடக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் முழு நேரமும் செயல்படும்.
- துப்புரவு பணியாளர்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்
- அவசர பயணத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் அவசர நிலையை நிரூபிக்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- நீண்ட தூர பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும்.
- விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்பவர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தலாம்.
- முன் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா கார்கள் மற்றும் டாக்சிகள் அனுமதிக்கப்படுகின்றன.
- ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்வதற்கு தடை இல்லை.
- மதுக்கடைகள் திறக்கப்படாது.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்