ரிசர்வ் வங்கியில் 800+ அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
அலுவலக உதவியாளர் பணிக்கு ரிசர்வ் வங்கியில் கடந்த பிப்ரவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 814 பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கித் துறையில் வேலை தேடும் ஆர்வலர்கள் அனைவரும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 15.03.2021 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ரிசர்வ் வங்கி பணியிட விவரங்கள்:
நாடு முழுவதும் 814 பணியிடங்களும், தமிழகத்தை பொறுத்த வரை சென்னையில் மட்டும் 70 பணியிடங்களும் காலியாக உள்ளன. விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.
இந்த வங்கி பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் மொழி திறமை சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.10,940 முதல் ரூ .20160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.