ரேஷன் கடைகள் அனைத்து நாட்களும் இயக்கம் – மத்திய அரசு வலியுறுத்தல்!!
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், அனைத்து நாட்களிலும் அரசின் நியாய விலைக்கடைகள் (ரேஷன்) இயங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
நியாய விலைக்கடைகள்:
ஏழை மக்களின் வாழ்வாதார நிலையினை கருத்தில் கொண்டு அரசு சார்பில் துவக்கப்பட்டது தான், நியாயவிலை கடைகள். இந்தியாவில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பொருட்கள் இந்த கடைகளின் மூலமாக மத்திய அரசு வழங்குகிறது. கொரோனா பரவல் எதிரொலியாக சில மாநிலங்களில் இந்த கடைகள் திறந்து இருக்கும் நேரம் குறைக்கப்பட்டடுள்ளதாக மத்திய அரசிற்கு புகார் சொல்லப்பட்டது.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம் – அரசு அறிவிப்பு!!
இதன் காரணமாக மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை செய்துள்ளது. அது, சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் நியாயவிலை கடைகள் திறந்து இருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மக்கள் தங்களது தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அனைத்து நாட்களிலும் நியாயவிலை கடைகளை திறந்து வைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அதே போல், கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் அதிகப்படுத்த வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிரதமரின் இலவச தானிய திட்டங்களின் கீழ் மக்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உணவு பொருட்கள் கிடைத்திட வழிவகை செய்யப்பட வேண்டும்.