தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள சென்னை உட்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் இனி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 33 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்படும் அவலம் ஏற்படுகிறது. இதனால் பல மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி ஆக்சிஜன் வசதி இல்லாமல் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இவ்வாறு உயிருக்கு போராடும் நபர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து சிறந்த பலனளிப்பதால் மக்கள் அதனை வாங்க பல மணி நேரமாக வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை!!
ரெம்டெசிவிர் மருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட 6 முக்கிய மாவட்டங்களில் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மருந்துக்காக பலர் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருப்பதால் தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாகவும் நோய் தொற்று பரவும் பாதிப்பும் உள்ளது. மேலும் கள்ளச்சந்தையில் மருந்தினை அதிக விலைக்கு பலர் விற்பனை செய்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழக அரசு ரெம்டெசிவிர் மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்த மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அரசிடம் ரெம்டெசிவிர் மருந்துகளை பெறும் சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்தால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் உத்தரவின் படி நாளை முதல் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து விற்பனை செய்யப்படும.