இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான 2டிஜி மருந்து – இன்று முதல் விநியோகம்!!
மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி (2 DG) எனும் கொரோனா தடுப்பு மருந்து இன்று (மே 17) முதல் மருத்துவமனைக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
தடுப்பு மருந்து
இந்தியாவில் கொரோனாவுக்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த தடுப்பு மருந்துகள் பெருமளவு மக்களுக்கு செலுத்தப்பட்ட போதிலும் அது எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை. அதன் காரணமாக மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் மருத்துவ நிறுவனமும் இணைந்து தூள் வடிவிலான ஒரு கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம் – அரசு அறிவிப்பு!!
இந்த நிலையில் மத்திய அரசின் டிஆர்டிஓ (DRDO) அமைப்பும், தனியார் நிறுவனமான டாக்டர் ரெட்டீஸும் இணைந்து உருவாகியுள்ள கொரோனா சிகிச்சை மருந்துக்கு 2டிஜி (2 DG) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த 2டிஜி (2 DG) கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று (மே 17) முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொரோனா சிகிச்சைக்காக 10,000 பாக்கெட் 2 DG மருந்துகளை டெல்லி மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ளார்.
TN Job “FB Group” Join Now
கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இம்மருந்து, 2 மற்றும் 3 கட்ட சோதனைகளில் நல்ல பலனை தந்ததால், இந்தியாவில் கொரோனா அவசரகால தேவைகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூள் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இம்மருந்தை நீரில் கலந்து பருகும் போது, குறைவான மற்றும் மிதமான நோய் தொற்று பாதிப்புடையவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.