அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி ரேஷன் கடைதான் பேங்க்!
ரேஷன் அட்டை மூலம் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக சென்றடைகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கேரள அரசும் பரிசீலித்து வருகிறது.
முக்கிய தகவல்:
தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் தான் ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் எந்தப்பகுதிக்குச் சென்றாலும் உணவுப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொருட்களை பெற முடியும். மோடி தலைமையிலான அதிரடியான பல திட்டகளுக்கு நடுவில், ஒரே நாடு, ஒரு அட்டை திட்டத்தை மத்திய அரசு கொரோனா காலகட்டத்தில் அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மக்கள் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தினை மத்திய அரசு வகுத்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி கேரள மாநிலத்தில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் கூடுதல் சேவைகள் மே மாதம் முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கேரளா மாநிலத்தில் சுமார் 14000 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 800 ரேஷன் கடைகளில் கூடுதல் அதிக இடவசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இட வசதி அதிகம் உள்ள ரேஷன் கடைகளின் உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளில் வங்கி சார்ந்த சேவைகளை வழங்குவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மக்கள் அதிக அளவில் பயன் அடைவார்கள்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த திட்டம் அமலுக்கு வருவதற்கும், கூட்டணி அமைப்பதற்கு நான்கு வங்கிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நல்ல திட்டம் நடைமுறைக்கு வந்தால் ரேஷன் கடைகளிலேயே வங்கி சேவைகளை எளிதாக பெறலாம். இதற்காக ரேஷன் கார்டுகளில் ATM கார்டுகளில் உள்ளது போன்ற சிப் பொருத்தப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள் போக மின் கட்டணம் உள்ளிட்ட பில் கட்டணங்களை செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.முதற்கட்டமாக இந்த சேவைகள் இந்த ஆண்டில் 1000 ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதுபோல பழங்குடி மக்கள் பயனடையும் வகையில் கூடுதலான பழங்குடி கிராமங்களில் நடமாடும் மொபைல் ரேஷன் கடைகளை அறிமுகப்படுத்த கேரள அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.