தமிழகத்தில் அதிகரித்து வந்த அரசியின் விலை தற்போது குறைய தொடங்கியுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
விலை மாற்றம்:
தமிழகத்தில் அரிசியின் விலை ஏற்றம் கண்டுள்ளது. பருவமழை தவறியதால், குறைவான விளைச்சல், மிக்ஜாம் புயல் ஜனவரியில் வீசிய பலமான காற்று ஆகிய காரணங்களால் விளைச்சல் குறைவாக உள்ளது. தற்போது சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையாகிறது. தற்போது கோடை விளைச்சலும், சந்தைக்கு வர தொடங்கிவிட்டதால், அரிசியின் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதாவது ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை மாறுதல்கள் ரேஷன் கடையில் அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.